Friday, November 16, 2012
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது.
இந்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்ந்தும் ஒரேமாதிரியான மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதென கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக உயிர்பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்றுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது இந்த அறிக்கை மூலம் தெளிவாக தெரியவருவதாக கனடா வெளிவிகார அமைச்சு கூறியுள்ளது.
இணக்கப்பாட்டு நடவடிக்கையில் முன்னேற்றம் தேவை என்பதற்கு மதிப்பளித்தல். பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற விடயங்களில் கனடாவின் கவலைகள் அதிகரித்துள்ளதை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதமரும் தாமும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நாட்டு மக்களையே முதன்மைப்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் குறிப்பிட்டுள்ளார்.
ஐநாவின் உள்ளக அறிக்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கனடா. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த சர்வதேச சமூத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
http://talktamil.blogspot.com/2012/11/blog-post_15.html
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment